நோய் தாக்குதல் மற்றும் போதிய விலை இல்லாததால் சாலையில் கொட்டப்படும் தக்காளிகள் - விவசாயிகள் வேதனை

கோவையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததாலும், நோய் தாக்குதல் காரணமாகவும் விற்பனைக்கு கொண்டு வந்த தக்காளிகளை விவசாயிகள் சாலையோரத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மதுக்கரை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடியே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடியாகும் தக்காளிகள் மூட்டை மூட்டையாக நாச்சிபாளையம் தக்காளி சந்தையில் குவிந்து வருகிறது. இதனிடையே அண்மையில் பெய்த மழையால் தக்காளியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் சந்தையில் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் விற்பனைக்கு எடுத்து வந்த தக்காளிகளை பாலத்துறை சாலையிலேயே விவசாயிகள் கொட்டிவிட்டு செல்கின்றனர்.



மேலும் ஒரு சிலர் தோட்டத்தில் போதிய விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இதுதொடர்பாக வேளாண் அதிகாரிகள் கூறியதாவது, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விவசாயிகள் தற்போது வந்துள்ள தக்காளியை பாதிப்பு இருந்தால் அப்படியே செடியில் விடாமல் பறிக்க வேண்டும் அப்போது தான் அடுத்து வளரும் தக்காளி சரியாக வளரும்.

இவ்வாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...