கோவையில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு செய்தார்

சாலைக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும்‌, மாநகராட்சி மூலம்‌ இணைப்புச்‌ சாலைகள்‌ ஏற்படுத்த மதிப்பீடுகள்‌ தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு ஆணையாளர் பிரதாப் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட சுங்கத்தில்‌ இருந்து உக்கடம்‌ வரை செல்லும்‌ புறவழிச்சாலை பகுதியில்‌ தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும்‌ மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்படும்‌ அணுகு சாலை அமைத்தல்‌ மற்றும்‌ தடுப்புச் சுவர்‌ அமைக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் நேரில்‌ ஆய்வு செய்தார்.

பாலத்தை ஓட்டி விபத்துக்கள்‌ ஏற்படுவதை தடுக்கும்‌ பொருட்டு அமைக்கப்படவுள்ள அணுகு சாலைக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும்‌, மாநகராட்சி மூலம்‌ இணைப்புச்‌ சாலைகள்‌ ஏற்படுத்த மதிப்பீடுகள்‌ தயாரிக்கவும்‌ சம்பந்தப்பட்ட பொறியாளா்களுக்கு அவர் உத்தரவிட்டார்‌.



இதனைதொடர்ந்து மத்திய மண்டலத்திற்குட்பட்ட உக்கடம்‌ பகுதியில்‌ 127.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ உயர்மட்ட மேம்பாலப்பணியினை ஆய்வு செய்த ஆணையாளர் பிரதப், விரைவில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்‌.

அதனைத்‌ தொடாந்து, உக்கடம்‌ புல்லுக்காடூ பகுதியில்‌ புதிதாக வணிக கடைகள்‌ அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்து, அப்பகுதியினை நெடுஞ்சாலைத்துறையினர்‌ சமன்படுத்தி மாநகராட்சியிடம்‌ வழங்கவும் அவர் அறிவுறுத்தினார்‌.

பின்னர், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட புட்டுவிக்கி பகுதியில்‌ உள்ள ராஜவாய்க்கால்‌ தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு செய்து, பழுதடைந்த புட்டுவிக்கி சாலையை செப்பனிட உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

பின்னர்‌, வார்டு எண். 92-க்குட்பட்ட சுகுணாபுரம்‌ காமராஜா்‌ நகரில்‌ குறிச்சி, குனியமுத்தூர்‌ பகுதிகளில்‌ பாதாள சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை ஆய்வு செய்த ஆணையாளர் பிரதாப், பாதாள சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ பணிகளை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வுகளின்போது, துணை மேயர்‌ வெற்றிசெல்வன்‌, தெற்கு மண்டல தலைவர்‌ தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள்‌ அகமது கபீர்‌, அப்துல்‌ காதர்‌, பாபு, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர்‌ சுந்தரமூரத்தி, உதவி கோட்டப்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளார்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள், உதவி பொறியாளர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...