கோவை சிங்காநல்லூரில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..!

சிங்காநல்லூர் அடுத்த திருக்குமரன் நகரில் வீடுபுகுந்து தனியாக இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் செல்வி (50). இவர், திருகுமரன் நகர் பகுதியில் தனது 2 மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

திருச்சி சாலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக தயாராகியுள்ளார்.

இந்நிலையில் காலை 10 மணியளவில் வேலைக்கு செல்ல வீட்டின் கதவை திறந்தபோது வெளியே ஒரு அடையாளம் தெரியாத நபர் நின்று கொண்டு இருந்துள்ளார்.

அவரை கண்ட செல்வி எதற்காக இங்கே நிற்கிறீர்கள் என கேட்ட போது, அந்த மர்ம நபர், வீட்டின் உரிமையாளர் வீட்டை பார்க்கச் சொன்னதாக கூறியுள்ளார்.

இதில், சந்தேகமடைந்த செல்வி கதவை மூட முயன்ற போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு, செல்வியை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து செல்வி பதறிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த போதுதங்க சங்கிலியை பறித்துச் சென்ற நபர், வெளியே காத்திருந்த மற்றொரு நபரின் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றது தெரியவந்தது

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட செல்வி சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில் ஒருவர் வெளியே காத்திருந்து நோட்டமிடுவதும் மற்றொரு நபர் வீட்டிற்குள் புகுந்து செல்வியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து விட்டு தயார் நிலையில் இருந்த இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

வீட்டில் செல்வி தனியாக இருப்பதை பயன்படுத்தி இருவரும் இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் இச்சமபவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பட்டபகலில் வீடு புகுந்து தனியாக இருந்தபெண்ணிடம் மர்மநபர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...