கோவை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் பரிதாப பலி

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் இருசக்கர வாகனம் மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவர்கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கோவை நோக்கிஅதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாக்கியம் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டுபடுகாயமடைந்தார். அருகில் இருந்தர்வர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்தவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் உற்கார்ந்து வந்த இளைஞரும் படுகாயமடைந்தார்.

இந்த விபத்து தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த கிரிதர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...