பாரதியார் பல்கலையில் 97,123 மாணவர்களுக்கு இன்று பட்டமளிப்பு விழா


கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் அறிவியல் மருத்துவர், முனைவர், இளநிலை முனைவர், இளங்கலை மற்றும் முதுகலை உள்ளிட்ட மாணவர்களுககு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.



இவ்விழாவில் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் கணபதி. முதன்மை விருந்தினராக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மேன்மைமிகு விஞ்ஞானி சசிபாலா சிங், பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அர.சுப்பையன் மற்றும் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டனர்.

இதில், பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கணபதி தலைமையேற்று வரவேற்புரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இயலாத தமிழக ஆளுநரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமாகிய வித்யாசாகர் ராவ் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.வி.அன்பழகன் ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், தான் பாரதியார் பல்கலைக் கழகத்தின் 10-வது துணைவேந்தராக பதவியேற்ற பின்பு பல்கலைக் கழகத்தின் தரத்தினை இந்திய அளவில் 14-வது இடத்திற்கும், தமிழக அளவில் முதலிடம் பிடித்ததையும் பெருமையுடன் குறிப்பிட்டார்.

மேலும், என்ஏஏசி கமிட்டியின் "ஏ" சான்றிதழ் பெற்றதையும், ஆராய்ச்சி பணிகளில் பல்கலைக் கழகத்தின் பங்களிப்பையும் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளையும் குறிப்பிட்டார்.



இதைத்தொடர்ந்து பேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தில் (டிஆர்டீஓ) தலைமை இயக்குநர் சசிபாலா சிங், பட்டங்கள் பெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், உலகிலேயே இந்தியாவில் தான் 15-30 வயது வரை 40 சதவிகிதம் இளைஞர்கள் உள்ளனர். தற்போது இந்தியா வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து வளர்ந்த நாடுகள் பட்டியலுக்கு வேகமாக முன்னேறி வருகிறது. 20-ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மகத்தானது என்று குறிப்பிட்டார்.

மேலும், இயற்கை பேரிடர்களில் சிக்கும் ராணுவ வீர்ர்களை மீட்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் முன்னாள் துணை வேந்தர் சுப்பையன் முதலில் அறிவியல் மருத்துவர் பட்டம் பெற்றார். இதைத்தொடர்ந்து, பட்டமளிப்பு விழாவில் 3 அறிவியல் மருத்துவர் பட்டங்கள், 1020 முனைவர் பட்டங்கள், 2250 இள முனைவர் பட்டங்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் என மொத்தம் 97123 பட்டங்கள் வழங்கப்பட்டது.

இதில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர் சபன் பரீத் பொருளாதாரவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...