சூடான் நாட்டு நோயாளிக்கு வாழ்வளித்த கேஎம்சிஎச்


சூடான் நாட்டைச் சேர்ந்த 42 வயதான முகமது அப்துல்ரெஹ்மான், இருதய நோய்க்கு சரியான சிகிச்சை பெற, இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, பெங்களூரு, சென்னை நகரங்களுக்கு நல்ல மருத்துவமனையை தேடி ஆறு மாதங்களாக அலைந்து கொண்டிருந்தார்.



இறுதியாக அவரது நண்பரின் அறிவுரையை ஏற்று, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு 2017 ஜனவரி முதல் வாரத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இங்கு மேற்கொள்ளப்பட்டது.

நியாயமான கட்டணத்தில் குறுகிய கால காத்திருப்பில் அவருக்கு விரைவான அறுவை சிகிச்சை அவரை கவர்ந்தது. முகமது அப்துல்ரெஹ்மான் கடந்த ஆறு மாதங்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தபோதும், அவருக்கு சில அடிப்படை பரிசோதனைகளில், இருதய ரத்த நாளங்களில் அடைப்புகள் இருப்பதை மட்டுமே கண்றியப்பட்டிருந்தது.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு அவர் வந்தபின், இருதய சிகிச்சைப் பிரிவு ஆலோசகர் டாக்டர் டிஎம்டி சரவணன், இருதய ரத்த நாளங்களில் பல இடங்களில் மிக மோசமான பல அடைப்புகள் இருப்பதை கண்டுபிடித்து விரைவிலேயே அறுவை சிகிச்சை செய்து கொள்ளமாறு அறிவுறுத்தினார்.

 

கேஎம்சிஎச் இருதய அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் தேவந்திர சிங் கூறுகையில், "இவரது இருதய குழாயில் பல்வேறு இடங்களில் அடைப்புகள் இருந்ததால், இந்த அறுவை சிகிச்சை சவாலாக இருந்தது. தொழில்நுட்ப ரீதியாகவும் சவாலானது. 

இந்த நிலையில், அறுவை சிகிச்சை குழுவினர் ஒட்டுமொத்த பைபாஸ் ஆபரேஷன் செய்ய முடிவு செய்து ஆபரேஷனை வெற்றிகரமாக செய்தது. இந்த அறுவை சிகிச்சை நீண்ட கால அடிப்படையில் பயனளிக்கும் விதமாக இருக்கும்.

இரண்டு வாரங்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முகமது அப்துல்ரெஹ்மான் வழக்கமான பணிகளை இன்னும் ஒரு மாத காலத்தி்ற்கு பின் எளிதாக மேற்கொள்ள முடியும்.

இத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சைகளை சவாலாக கேஎம்சிஎச்-சில் ஏற்று செய்யப்படுவதால், சர்வதேச அளவில் உள்ள நோயாளிகள் இங்கு வர ஆர்வம் காட்டுகின்றனர்" என்றார்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிச்சாமி, சூடான் நாட்டினருக்கு, இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் குழுவினரை பாராட்டினார். கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், இதற்கான வசதிகள் உள்ளதால் டாக்டர்கள் தன்னம்பிக்கையுடன் சிகிச்சையை மேற்கொள்கின்றனர்," என்றார்.

கேஎம்சிஎச் மருத்துவமனை, இந்த மண்டலத்தில் உள்ள பொதுமக்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச அளவிலான நோயாளிகளுக்கும் அவர்களது பயணத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. கோவைக்கு சர்வதேச விமான போக்குவரத்து ஒரு குறையாக இருந்தாலும், கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க நாடுகள், அரபு நாடுகளிலிருந்தும் சிகிச்சைக்காக கோவைக்கு வருகின்றனர். குறிப்பாக சூடான், யேமன், ஓமன் நாடுகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...