கோவையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பட்டம்

கோவையில் இனாமாக கொடுக்கப்பட்ட நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதாக கூறி, அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்கள் விவசாயிகளுக்கு இனாமாக கொடுக்கப்பட்ட நிலையில் அதற்கான உரிமை பட்டா வழங்கப்பட்டது. இதனிடையே இந்து சமய அறநிலையத்துறை இனாமாக கொடுக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.



இதனை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் இனாம் விவசாயிகள் இயக்கத்தினர் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழக அரசு கடந்த 1963-ஆம் ஆண்டு இனாம் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து நிலத்தை உழுது கொண்டிருந்த உழவர்களுக்கு உரிமை பட்டா வழங்கியுள்ளதாகவும் ஆனால் அதிகாரிகள் இந்த நிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.



நில உரிமை படைத்த உழவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி சட்டவிரோதமாக அறிவிப்புகளை அனுப்பி, உழவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்க அறநிலையத்துறை முயற்சி செய்து வருவதாகவும் இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...