கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு எதிராக மாநகராட்சி ஊழியர்கள் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் உடலில் பிளாஸ்டிக் பைகளை கட்டிக்கொண்டு, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு எதிராக நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில், மாநகராட்சி ஊழியர்கள் உடல் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை கட்டிக் கொண்டு, பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்கு எதிராக நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யவும் தமிழக அரசு தடை செய்துள்ளது.



அதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி சார்பில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி பணியாளர்கள் உடல் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை கட்டிக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அரசு எடுக்கும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



அதேபோல் தமிழக அரசின் பிரச்சாரமான ”மீண்டும் மஞ்சப்பை” என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...