கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு எதிராக மாநகராட்சி ஊழியர்கள் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் உடலில் பிளாஸ்டிக் பைகளை கட்டிக்கொண்டு, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு எதிராக நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில், மாநகராட்சி ஊழியர்கள் உடல் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை கட்டிக் கொண்டு, பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்கு எதிராக நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யவும் தமிழக அரசு தடை செய்துள்ளது.



அதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி சார்பில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி பணியாளர்கள் உடல் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை கட்டிக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அரசு எடுக்கும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



அதேபோல் தமிழக அரசின் பிரச்சாரமான ”மீண்டும் மஞ்சப்பை” என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...