கோவை ஈச்சனாரி அருகே பதுக்கி வைத்திருந்த 3.6 டன் ரேசன் அரிசி பறிமுதல்….!

நேற்று இரவு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது, ஈச்சனாரி விநாயகர் கோவில் பின்புறம் இருந்த திறந்த வெளியில் இருந்த அறையில் 3 6 டன் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.



கோவை: கோவையில் இருந்து ரேசன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதனை கேரளாவிற்கு அதிக லாபத்தில் விற்பனை செய்யும் சட்டவிரோதமான செயலை தடுக்கும் பொருட்டு, மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை ஈச்சனாரி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நேற்று இரவு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஈச்சனாரி விநாயகர் கோவில் பின்புறம் இருந்த திறந்த வெளியில் இருந்த அறையில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அவற்றை சோதனை செய்த போது, அவை அனைத்தும் ரேசன் அரிசி என்று தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 3.6 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அரிசியை பதுக்கியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...