பொள்ளாச்சியில் நிதி நிறுவனத்தில் 10 லட்சம் மோசடி செய்த கலெக்சன் ஏஜென்ட் கைது - குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

வாகனங்களுக்கு கடனுதவி வழங்கும் நிதி நிறுவனத்தில் பணியில் இருந்த, மாதத் தவணை வசூல் செய்யும் ஊழியர், ரூ.10.12 லட்சத்தை கையாடல் செய்த குற்றத்துக்காக அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் அம்மன் நிதி நிறுவனம் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிதி நிறுவனத்தில், 2 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களுக்கு ஏஜெண்ட் மூலம் மற்றும் தனி நபர்களுக்கு கடன் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெகமம் கள்ளிப்பட்டியை சேர்ந்த விவேகானந்தன் (31) என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் விற்பனை பிரதிநிதியாக அந்த நிதி நிறுவனத்தில் சேர்ந்திருக்கின்றார். மாதந்தோறும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தவணையை வசூலித்து நிதி நிறுவனத்தில் செலுத்துவது தான் இவரது பணி.

இந்தநிலையில், கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதியில் இருந்து விவேகானந்தன் வேலைக்கு வராமல் இருந்துள்ளார். தொடர்ச்சியாக அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் ஆன நிலையில் இருந்துள்ளது.

இதனால், சந்தேகமடைந்த நிதி நிறுவனத்தினர், நிதி நிறுவன கணக்குகளை தணிக்கை செய்தனர். அப்போது நிதி நிறுவனத்தில் ரூ.10.12 லட்சத்து விவேகானந்தன் கையாடல் செய்தது தெரியவந்தது. இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த நிதி நிறுவன இயக்குனர் ராம்குமார் உடனே இதுதொடர்பாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். விசாரணையில், நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வந்த விவேகானந்தன் ரூ.10 லட்சத்து 12 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, விவேகானந்தன் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...