தொடர் விடுமுறையால் உதகைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் - தாவரவியல் பூங்காவை கண்டு ரசிக்க ஆர்வம்

காலாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் என தொடர் விடுமுறை காரணமாக உதகைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகையால், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளன.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக வார நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை என்பது குறைவாக காணப்பட்டாலும் தொடர் விடுமுறை காலங்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் வரத்து காணப்படும்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.



இதனால் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் உதகைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.



அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை தாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க அதிக ஆர்வம் காட்டுவதால் பூங்காவில் இன்று காலை முதலே கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தற்போது குளிர் காலம் என்பதால் பூங்காவில் மலர்கள் இல்லாவிட்டாலும் குளிர்ச்சியான காலநிலையில் பூங்காவை ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.



இதே போல ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் போன்ற பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...