கோவையில் மோப்ப நாய்களுக்கு 6 மாத கால சிறப்பு பயிற்சி - நாமக்கல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது..!

வெடிகுண்டு மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் 6 மாதம் பயிற்சி முடித்த நிலா, டயானா, ஸ்டெஃபி என்ற மூன்று மோப்ப நாய்களும், காவல் ஆணையாளரின் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.



கோவை: தமிழ்நாடு காவல்துறை பிரிவில் மோப்ப நாய்களின் பங்கு அளப்பறியது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக குற்ற பின்னணியில் உள்ள நபர்களை கைது செய்ய சின்ன தடயம் கிடைத்தாலும், மோப்ப நாய்களை கொண்டு எளிதில் அவர்களை கண்டுபிடிக்கலாம்.

அதுமட்டுமின்றி வெடிகுண்டு கண்டறிதல், கஞ்சா போன்ற போதை பொருட்களை கண்டறிதல், குற்றவாளிகளை பின் தொடர என மோப்ப நாய்கள் போலீசாருக்கு பெருமளவில் உறுதுணையாக இருந்து வருகிறது.

அவ்வாறான மோப்ப நாய்கள் முறையான பயிற்சி மூலம் செயல்முறைக்காக தயார்படுத்தப்படுகின்றன. இதற்காக, கோவையில் போலீஸ் மோப்பநாய்களுக்கு பயிற்சி அளிக்கும் தனிப்பிரிவு செயல்படுகிறது.

அந்த வகையில், கோவையில் 6 மாதம் பயிற்சி முடித்த 3 மோப்ப நாய்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 3 மோப்ப நாய்களுக்கு 6 மாதங்களாக பயிற்சியானது அளிக்கப்பட்டது.

நிலா, டயானா என்று பெயரிடப்பட்ட இந்த இரு நாய்களுக்கும் வெடிகுண்டு கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஸ்டெபி என்று பெயரிடப்பட்ட மோப்ப நாய் குற்றவாளிகளை கண்டறிவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த மூன்று நாய்களுக்கும் சிறப்பு பயிற்சி நிறைவு பெற்ற நிலையில், அவற்றுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் குறித்து காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கேட்டறிந்தார்.

இதையடுத்து, ஆணையரின் உத்தரவின்படி நிலா, டயானா மற்றும் ஸ்டெபி நாமக்கல் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Newsletter

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...