கோவையில் ஆட்சியர் தலைமையில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் பொதுக்குழு கூட்டம்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் தொடர்ந்து குற்றம் புரிந்தால் கால்நடைகளை பறிமுதல் செய்வது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோயம்புத்தூர் மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கம் பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.



இந்த பொதுக்குழு கூட்டத்தில், கோவையில் உள்ள பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் தொடர்ந்து குற்றம் புரிந்தால் கால்நடைகளை பறிமுதல் செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது.



கூடத்தில், வள்ளலார் பல்லுயிர் காப்பக நிதி ஒதுக்கிட்டிலிருந்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு கோருவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கால்நடைகளின் நலன் சார்ந்த செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, செயலாக்கம் செய்ய இக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.



இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் தீபக் ஜேக்கப், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி, வனப்பாதுகாவலர் கோசாலா மற்றும் நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள், விலங்கு பிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...