கோவையில் ஆட்சியர் தலைமையில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் பொதுக்குழு கூட்டம்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் தொடர்ந்து குற்றம் புரிந்தால் கால்நடைகளை பறிமுதல் செய்வது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோயம்புத்தூர் மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கம் பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.



இந்த பொதுக்குழு கூட்டத்தில், கோவையில் உள்ள பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் தொடர்ந்து குற்றம் புரிந்தால் கால்நடைகளை பறிமுதல் செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது.



கூடத்தில், வள்ளலார் பல்லுயிர் காப்பக நிதி ஒதுக்கிட்டிலிருந்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு கோருவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கால்நடைகளின் நலன் சார்ந்த செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, செயலாக்கம் செய்ய இக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.



இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் தீபக் ஜேக்கப், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி, வனப்பாதுகாவலர் கோசாலா மற்றும் நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள், விலங்கு பிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...