கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கோவை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 32 பயணிகள் காயம்

கோவை நீலாம்பூர் அருகே பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பயணிகள் 32 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு, கோவை வழியாக, கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்றுள்ளது. அந்த பேருந்தில், 37 பயணிகள் மற்றும் ஓட்டுனர், கிளீனர், உதவியாளர் என 40 பேர் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆம்னி பேருந்து கோவை புறவழி சாலையில் நீலம்பூர் அருகேயுள்ள வெங்கடாபுரம் பிரிவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், துரதிஷ்டவசமாக ஆம்னி பேருந்தானது, சாலையோரம் இருந்த சிறிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த பயணிகள், ஓட்டுநர் உட்பட 32 பேர் காயமடைந்தனர்.

இதில், 14 பேர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறிய காயங்கள் அடைந்தவர்கள் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில், சூலூர் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...