கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கோவை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 32 பயணிகள் காயம்

கோவை நீலாம்பூர் அருகே பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பயணிகள் 32 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு, கோவை வழியாக, கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்றுள்ளது. அந்த பேருந்தில், 37 பயணிகள் மற்றும் ஓட்டுனர், கிளீனர், உதவியாளர் என 40 பேர் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆம்னி பேருந்து கோவை புறவழி சாலையில் நீலம்பூர் அருகேயுள்ள வெங்கடாபுரம் பிரிவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், துரதிஷ்டவசமாக ஆம்னி பேருந்தானது, சாலையோரம் இருந்த சிறிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த பயணிகள், ஓட்டுநர் உட்பட 32 பேர் காயமடைந்தனர்.

இதில், 14 பேர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறிய காயங்கள் அடைந்தவர்கள் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில், சூலூர் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...