புத்தாண்டு கொண்டாட்டம்: இரவு 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை - திருப்பூர் மாநகர காவல் ஆணையர்

2022 ஆம் ஆண்டில் கொலை வழக்குகள், கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளை திருப்பூர் மாநகர காவல்துறையினர் சிறப்பாக கையாண்டுள்ளனர் என்று திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் பிரபாகரன் புகழாரம் சூட்டினார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகர் பகுதிகளில் 2022 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் பிரபாகரன் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



மேலும், குண்டர் தடுப்புச் சட்டம், கொலை வழக்குகள், கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை வழிப்பறி வழக்குகள், கஞ்சா விற்பனை குட்கா விற்பனை, லாட்டரி விற்பனை சூதாட்டம், மோட்டார் வாகன சட்டப்பிரிவு என அனைத்து வழக்குகளையும், திருப்பூர் மாநகர காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக காவல் ஆணையாளர் பெருமிதம் தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருப்பூர் மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு ஒரு மணிக்கு மேல் அனுமதி இல்லை என்றும் புத்தாண்டு இரவில் வாகனங்களை அதிவேகமாக இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்த நடவடிக்கை மூலமாக அதிவேக பயணம் குறைந்து புத்தாண்டு போன்ற நன்னாளில் விபத்துக்களும் தவிர்க்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...