மனசாட்சி என்ற காவலருக்கு பொதுமக்கள் பயந்து நடந்தால் எந்த குற்றச்செயலும் நடக்காது - திருப்பூர் மாவட்ட காவல்துறை

திருப்பூர் பல்லடத்தில் காவல்துறை சார்பில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய போலீசார், பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்துறையினர் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சஷாங் சாய், பல்லடம் டி.எஸ்.பி செளமியா, ஏ.டி.எஸ்.பி மற்றும் பல்லடம், அவினாசிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.



மேலும் பல்லடம் காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர்கள், போக்குவரத்து போலீசாரும் இந்த நிகழ்வில் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.



பல்லடம் பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள், வான வேடிக்கைகள் வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.



மேலும் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு காவல் துறையினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



அப்போது பேசிய காவலர் ஒருவர், மனசாட்சி என்ற காவலருக்கு பொதுமக்கள் பயந்து நடந்தால் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள் என ஆலோசனை வழங்கியது அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...