மனசாட்சி என்ற காவலருக்கு பொதுமக்கள் பயந்து நடந்தால் எந்த குற்றச்செயலும் நடக்காது - திருப்பூர் மாவட்ட காவல்துறை

திருப்பூர் பல்லடத்தில் காவல்துறை சார்பில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய போலீசார், பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்துறையினர் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சஷாங் சாய், பல்லடம் டி.எஸ்.பி செளமியா, ஏ.டி.எஸ்.பி மற்றும் பல்லடம், அவினாசிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.



மேலும் பல்லடம் காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர்கள், போக்குவரத்து போலீசாரும் இந்த நிகழ்வில் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.



பல்லடம் பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள், வான வேடிக்கைகள் வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.



மேலும் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு காவல் துறையினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



அப்போது பேசிய காவலர் ஒருவர், மனசாட்சி என்ற காவலருக்கு பொதுமக்கள் பயந்து நடந்தால் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள் என ஆலோசனை வழங்கியது அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...