கோவையில் கொடூரமாக தாக்கி 2 மாத நாய்க்குட்டி கொலை - போதை ஆசாமி கைது

கோவை வடவள்ளி சோமையம்பாளையத்தில் குடிபோதையில் 2 மாத நாய் குட்டியை அடித்துக் கொலை செய்த செந்தில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை வடவள்ளி சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (26), தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், 2 மாத நாய்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே செந்தில்(30) என்பவர் வசித்து வருகிறார்.



இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக குடிபோதையில் வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்த செந்தில், தெருவில் நின்றிருந்த சிவக்குமாரின் வளர்ப்பு நாய்குட்டியை கற்கள் மற்றும் கம்பால் கொடூரமாக தாக்கி கொன்றுள்ளார்.

இதை தட்டிக்கேட்ட சிவக்குமாரையும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிவக்குமார் அளித்த புகாரின்பேரில் வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 2 மாத நாய்குட்டியை கொடூரமாக தாக்கி செந்தில் கொல்லும் சிசிடிவி காட்சிகள், சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நமது சிம்ளிசிட்டி இணையதள பக்கத்திலும் செய்தி வெளியானது. இந்த செய்தியின் எதிரொலியாக, நாய்குட்டியை அடித்துக் கொன்ற செந்திலை வடவள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...