குப்பையில்லா நகரமாக கோவையை மாற்றுவோம்..! - களத்தில் இறங்கிய என்சிசி மாணவர்கள்

கோவை சுங்கம் குளக்கரையில் உள்ள குப்பைகளை, 200க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் இணைந்து சுத்தம் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



கோவை: கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி கல்லூரி என்சிசி மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக இன்று சுங்கம் பகுதியில் உள்ள குளக்கரையில் இருந்த குப்பைகளை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய மாணவர் படை மாணவ மாணவியர் அகற்றினர்.



இதில் ஸ்ரீ கோபால் நாயுடு உயர்நிலைப்பள்ளி, சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளி, சர்வஜனா மேல்நிலை பள்ளி, நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த என்சிசி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று குப்பைகளை அகற்றினர்.

மேலும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்த வேண்டாம், குப்பைகளை குப்பை தொட்டில் போட வேண்டும், சுற்றுசூழலை பேணி காக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தேசிய மாணவர் படை கோவை மாவட்ட அதிகாரி குமரன் ஒருங்கிணைத்தார்.

ஆறாவது தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி சார்பில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...