குப்பையில்லா நகரமாக கோவையை மாற்றுவோம்..! - களத்தில் இறங்கிய என்சிசி மாணவர்கள்

கோவை சுங்கம் குளக்கரையில் உள்ள குப்பைகளை, 200க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் இணைந்து சுத்தம் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



கோவை: கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி கல்லூரி என்சிசி மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக இன்று சுங்கம் பகுதியில் உள்ள குளக்கரையில் இருந்த குப்பைகளை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய மாணவர் படை மாணவ மாணவியர் அகற்றினர்.



இதில் ஸ்ரீ கோபால் நாயுடு உயர்நிலைப்பள்ளி, சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளி, சர்வஜனா மேல்நிலை பள்ளி, நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த என்சிசி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று குப்பைகளை அகற்றினர்.

மேலும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்த வேண்டாம், குப்பைகளை குப்பை தொட்டில் போட வேண்டும், சுற்றுசூழலை பேணி காக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தேசிய மாணவர் படை கோவை மாவட்ட அதிகாரி குமரன் ஒருங்கிணைத்தார்.

ஆறாவது தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி சார்பில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...