திருப்பூரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்க நடவடிக்கை! - புதிய காவல் ஆணையர் உறுதி

திருப்பூர் மாநகரின் புதிய காவல் ஆணையராக பிரவீன்குமார் அபினவு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு உதயமானதற்கு பின்னர் 2013 ஆம் ஆண்டு மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது.



இதில் திருப்பூர் மாநகர காவல் துறையின் 11 வது காவல் ஆணையராக சேலம் சரகத்தில் பணியாற்றி வந்த டிஐஜி பிரவீன் குமார் அபினவு இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன்குமார் அபினவு, திருப்பூர் மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் வரும் பொதுமக்களின் குறைகளை தீர்க்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கப்படும் என்றும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு முற்றிலுமாக பணியாற்றுவேன் என்றும் கூறினார்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...