திருப்பூர் பல்லடத்தில் உயிருடன் காதலியை எரித்த இளைஞர் கைது

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட காதலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், காதலனை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பனப்பாளையம் அருகே பூஜா (19) என்ற இளம்பெண் தலையில் காயங்களுடன் உடலில் உடையில்லாமல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் மாலை சாலையோரம் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன் லோகேஷ் தலையில் தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.



இதே வேளையில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லை என சிகிச்சையில் இருந்த லோகேஷ், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பூஜா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார்.



அதனை தொடர்ந்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றிய பல்லடம் போலீசார் நேற்றிரவு காதலன் லோகேஷை கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...