பெண்களுக்கு எதிரான குற்றங்களை பேசும் ‘V3’ திரைப்படத்தை பார்த்து பாராட்டிய பெண்கள்

கோவையில் உள்ள தனியார் திரையங்கில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பேசும் ‘V3’ திரைப்படத்தின் இலவச காட்சியை பார்த்த பெண்கள் படக்குழுவை பாராட்டினர்.


கோவை: 2023ஆம் ஆண்டில் திரைக்கு வந்துள்ள முதல் தமிழ் திரைப்படமான “V3”திரைப்படம் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 250 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் விஷ்ணு பிரபு தயாரிப்பில், அமுதவாணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள V3 திரைப்படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

பெண்களுக்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது ஒரு நாளில் கிடைக்க கூடியது அல்ல. பாலின சமத்துவம், பெண்களுக்கு மதிப்பளிப்பது தொடர் விழிப்புணர்வு போன்றவை தான் தீர்வாக அமையும் என்பதை பல திரைப்படங்கள் முன்வைத்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், மேஜரான ஆணும் பெண்ணும் சுய ஒப்புதலோடு பாலியலில் ஈடுபடுவது ஒரு குற்றமாக பார்க்க கூடாது. மாறாக, பாலியல் தொழிலை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று கருத்தை முன்வைக்கிறது இன்று வெளியாகியுள்ள V3 திரைப்படம்.

கோவை புரூக் ஃபீல்டுஸ் மாலில் உள்ள எஸ்.பி.ஐ திரையரங்கில் V3 திரைப்படத்தின் முதல் காட்சியை தயாரிப்பாளர் விஷ்ணு பிரபு மற்றும் இயக்குனர் அமுதா வாணன் மற்றும் திரைக்குழுவினர் வெளியிட்டனர். 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

படம் குறித்து இயக்குனர் அமுதவானன் நம்மிடம் பேசியதாவது, இன்று சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கி வருகிறது. அவற்றில் எச்சரிக்கை மணி அடிப்பதாக உள்ளது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை ஆராய்ந்து பார்த்தால் அதில் பல்வேறு விடயங்கள் வெளிச்சத்துக்கு வரும். போதை, குடிப்பழக்கம், பெண்களை துட்சமாக கருதும் மனநிலை போன்ற பல்வேறு காரணங்களால் குற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்பது நாம் அறிந்ததே.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது, இது போன்ற குற்றங்களில் ஈடுபட எண்ணுவோருக்கு ஒரு பாடமாக எச்சரிக்கை மணியாக அமைந்தாலும், பாலியல் குற்றங்களை குறைக்க நாம் இந்த பிரச்சனையை அதன் அடி ஆழத்தில் இருந்து பார்க்க வேண்டும். அது தான் V3 திரைப்படம் உருவாக முக்கிய நோக்கமாகும்.

பாலியல் தொழிலை அரசு அங்கீகரித்தால் பாலியல் குற்றங்கள் பெருமளவு குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த கேள்வியை தான் V3 படத்தில் நான் முன் வைத்துள்ளேன்.

பெரும்பாலும், பாலியல் தொழில் நடக்கும் ரெட் லைட் ஏரியா என்று சொல்லக்கூடிய பகுதிகளை சுற்றியுள்ள 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாலியல் குற்றங்கள் குறைவு ஆய்வுகள் கூறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...