நீலகிரி காட்டேரி அருகே காட்டு யானை விரட்டியதால் அலறியடித்து ஓடிய பொதுமக்கள் - பரபரப்பு..!

காட்டேரி அடுத்த பழப்பண்ணை அருகே சாலையை கடக்க முயன்ற காட்டு யானை விரட்டியதால் அச்சமடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடிய நிலையில், வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வனத்துறை அறிவுறுத்தல்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காட்டு யானை கூட்டம் ஒன்று முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட குன்னூர் வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த நிலையில் அந்த கூட்டம் வனப் பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து சாலை ஓரங்களிலும் தேயிலை தோட்டங்களிலும் சுற்றி திரிந்து வருகின்றன. குறிப்பாக குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அடிக்கடி கடந்து சென்று வருகின்றன.



இந்த நிலையில் இன்று காலை யானை கூட்டம் காட்டேரி பழப்பண்ணை அருகே சாலையை கடக்க முயன்ற போது, சாலையில் இருந்த பொதுமக்களை ஆக்ரோஷமாக துரத்தியதால், அச்சமடைந்த பொதுமக்கள், அலறியடித்து ஓடியதால் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் யானைகள் தனது குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றன.



இந்த யானை கூட்டம் காட்டேரி, மரப்பாலம், டபுள் போஸ்ட்டு ஆகிய பகுதிகளில் உலா வருவதால் குடியிருப்பு மற்றும் சாலை பகுதிகளுக்கு வராமல் தடுக்கும் வகையில் வனத்துறையினர் ஆறு குழுக்களாக பிரிந்து அவற்றின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

மேலும், பர்லியார் மலைப்பாதையில் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...