ஊழல் அதிகரித்துள்ளதால் தொழில் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு செல்லும் அவலம் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தகவல்

கோவை: ஊழல் அதிகரித்துள்ள காரணத்தால் தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்லும் அவல நிலை காணப்படுகிறது. இது நல்லதல்ல, என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசினார்.



கோவை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான(எம்எஸ்எம்இ) தேசிய தொழில் அமைப்பு லகு உத்யோக் பாரதி சார்பில் தென்மண்டல மாநாடு கோவையில் நேற்று நடந்தது.



பாஜக தேசிய மகளிரணி தலைவி மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.



நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பேசுகையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது.

நகர்புறங்களில் உள்ள வசதிகளை கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எம்எஸ்எம்இ வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மத்திய அரசின் கவனத்தக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க உதவி செய்யப்படும் என்றார்.



பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

இன்று பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உலக நாடுகள் பல தவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான சிறப்பான ஆட்சி காரணமாக இந்தியாவில் பாதிப்பு ஏற்படவில்லை.

கரோனா நோய்தொற்று பரவல் காலத்திலும் தொழில்துறை நெருக்கடியில் இருந்து மீள உதவும் வகையில் அவசர கால கடனுதவி திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி உதவியது.

நாட்டின் மொத்த ஏற்றுமதியில் எம்எஸ்எம்இ குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பல்வறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுதுறைகளில் ஊழல் அதிகரித்து காணப்படுவதால் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உரிமம் பெறுதல் உள்ளிட்ட தொழில் தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கு மிகப்பெரிய தொகை லஞ்சமாக கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த அவல நிலை காரணமாக தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் பல கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று கொண்டுள்ளன. இது நல்லதல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.

லகு உத்யோக் பாரதி, மாநில தலைவர் விஜயராகவன் தலைமையில் இணைப்பொதுச்செயலாளர் சிவக்குமார், மாநில துணைத் தலைவர் கல்யாண்சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் மாநாடு ஏற்பாடுகள் செய்தனர்.



லகு உத்யோக் பாரதி, அகில இந்திய தலைவர் பல்தேவ் பாய் பிரஜாபதி, இணை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம், துணைத் தலைவர் ஹரிஹரன் உள்பட தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரியில் உள்ளிட்ட பல்வறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

டிஜிட்டல் மாற்றம், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தல், தொழில் மேம்பாடு, தலைமை பண்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் பேசி கலந்துரையாடினர்.

Newsletter

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...