விவசாயத் தோட்டத்தில் உலா வரும் ஒற்றைக் காட்டுயானை - கோவையில் விவசாயிகள் கலக்கம்!

கோவை வாளையாறு எல்லையில் உலா வரும் ஒற்றைக் காட்டுயானை, மாவூத்தம்பதி கிராமத்தில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வாளையாறு எல்லையில் உள்ள மாவூத்தம்பதி ஊராட்சி முருகன்பதி கிராமத்தில், தர்மராஜ் என்ற விவசாயி தமது தோட்டத்தில் தென்னை, வாழை, சோலம் ஆகியவற்றை பயிரிட்டுள்ளார்.



இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அருகே உள்ள மலையை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து இறங்கும் ஒற்றை காட்டு யானை, தர்மராஜின் தோட்டத்தில் புகுந்து, அரை ஏக்கரில் பயிரிட்டிருந்த சோளப்பயிர்களை முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, அங்குள்ள சுமார் 3 வயதுடைய தென்னங்கன்றுகளை சேதப்படுத்தி குறுத்துகளையும் பிடிங்கியுள்ளது.

பேட்டரி மின்வேலிகள் அமைத்திருந்தாலும், இந்த ஒற்றை யானையானது, அருகே உள்ள மரங்களை தூக்கி வேலிகள் மீது வீசி உடைத்துவிட்டு உள்ளே செல்கிறது. வனப்பகுதிக்குள் விரட்ட முயல்பவர்களையும் , யானை தாக்க முயல்வதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.



மேலும், காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதத்தால் ஏற்படும் நஷ்டத்தையும் தாண்டி, அதனை சீர்செய்யவும் கூடுதல் செலவு ஆவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் நுழைவதைத் தடுக்க வனத்துறை நிரந்தரத் தீர்வு காண வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...