கோவை அருகே செல்போன் பறித்த 3 இளைஞர்கள் கைது!

கோவை மாவட்டம் ராமச்சியம்பாளையம் அருகே வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன் மற்றும் இ-பைக்கை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை சோமனூர் ராமச்சியம்பாளையம் அருகே நேற்றிரவு 10 மணியளவில் வட மாநில தொழிலாளர்களான சுரேந்திரா தனது நண்பர்களுடன் கடைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்தனர். பின்னர் அவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன்களை பறித்துச் சென்றனர்.

இதேபோல் சோமனூர் கடைவீதியில் சூலூர் செந்தேவி பாளையத்தைச் சேர்ந்த சதீஸ் என்பவர் இ-பைக்கையும் நிறுத்தி விட்டு கடைக்குச் சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் அவரது பைக்கையும் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருவாரூரைச் சேர்ந்த ஆகாஷ்(23), விருதுநகரைச் சேர்ந்த தமிழ்வாணன் (32) மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த குணசேகர் (34). ஆகிய மூன்று பேரும் வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...