கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கும்பல் கைது - தனிப்படைப் போலீசார் அதிரடி!

கோவையில் கருமத்தம்பட்டி அருகே பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் 3 பேர் சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது.


கோவை: கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த மர்ம கும்பல் அங்குள்ள வீடுகளை நோட்டமிடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, சங்கோதிபாளையம், செல்லப்பம்பாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள், தோட்டங்களுக்குள் தனியே இருக்கும் வீடுகளில் திருட முயற்சித்துள்ளனர். வீட்டின் கூறையின்மீது ஏறி ஓட்டை பிரித்து உள்ளே இறங்கவும் முயற்சித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, அங்குள்ள வட மாநில நபரிடம் செல்போன்களையும் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக சமூகவலைதளங்களில் வெளியான சிசிடிவி காட்சியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இது குறித்த கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் உதவியோடு தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து, 2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

அதன்படி, கைது செய்யப்பட்டவர்கள் ரோஹித் (20), விஜயராஜ் (22), சூர்யா (23) , மேலும் 3 பேர் 18வயது மற்றும் 16 வயதான சிறுவர்கள் எனவும், 6 பேரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த கும்பல் மீது ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் அந்தக் கும்பல் கைதாகியிருப்பது கருமத்தம்பட்டி பகுதி மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...