செம்மேடு அருகே சாலை விபத்தில் இருவர் படுகாயம்

கோவை செம்மேடு அருகே சுற்றுலா வாகனம் மீது பைக் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.


கோவை: கோவை பேரூர் மத்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் தனது நண்பரான மணிசங்கர் (26) என்பவருடன் பைக்கில் கோவை-குற்றாலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.



செம்மேடு அருகே உள்ள வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரே வந்த சுற்றுலா வாகனம் மீது மோதியது.



இதில் தூக்கிவீசப்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து சுற்றுலா வாகன ஓட்டுநர் ஜமீலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...