உதகையில் பூச்சி கொல்லி மருந்து (Hit) வெடித்து இருவர் படுகாயம் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!

உதகையில் குளிர் காய்ந்த போது பூச்சி கொல்லி மருந்து டப்பா (Hit) வெடித்து 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில், பதை பதைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் தற்போது உறைபனி காலம் என்பதால் மாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை கடுமையான குளிர் நிலவி வருகிறது.

இதனால் மாலை நேரங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி தீ மூட்டி குளிர் காய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் தாவரவியல் பூங்கா அருகே நேற்று முன்தினம் இரவு சிலர் குளிருக்கு தீ மூட்டி குளிர் காய்ந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த ஒருவர் அட்டை பெட்டிக்குள் எளிதில் தீப்பற்ற கூடிய பூச்சி கொல்லி மருந்து டப்பா (Hit) இருப்பது தெரியாமல் தீயில் போட்டுள்ளார்.

இதனிடையே அட்டைப்பெட்டி நன்றாக எரிந்து கொண்டிருந்த நிலையில், அதில் இருந்த பூச்சிகொல்லி மருந்து டப்பா அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கு குளிர் காய்ந்து கொண்டிருந்த வியாபாரி நந்து மற்றும் சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.



இந்த சம்பவத்தில், சங்கர் லேசான காயத்துடன் அதிஷ்டவசமாக தப்பிய நிலையில் நந்துவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், அவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஹிட் டப்பா வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...