திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பொங்கல் விழா - பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடிய காவலர்கள்

திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து, பொங்கல் பொங்கி வரும் போது, 'பொங்கலோ பொங்கல்' என முழக்கமிட்டு ஆடி பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



திருப்பூர்: தை திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



காவல் ஆய்வாளர் பிச்சையா தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழா நிகழ்வில் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.



காவல் நிலையத்திற்கு முன்பு வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்து, பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வரும் பொழுது குலவை மற்றும் பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டும் ஆடிப்பாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



மேலும் இந்த தெற்கு காவல் நிலையம் கடந்த ஆண்டு தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு முதல்வரின் விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...