கோவையில் நடைபெற்ற மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் - இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாட்டம்

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் கோவையில் நடைபெற்ற மதநல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து மதத்தினர் பங்கேற்றது மட்டுமல்லாமல், உலக அமைதி வேண்டி சமாதான புறாக்களை பறக்க விட்டனர்.



கோவை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் கோவையில் மதநல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.



பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக கொண்டாடப்பட்ட இந்த பொங்கல் விழாவில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என பலரும் பங்கேற்று பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி முகமது ரபி ஏற்பாட்டில் கோவை பேரூர் ஆதின வளாகத்தில் நடைபெற்ற இந்த மத நல்லிணக்க பொங்கல் விழாவில், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ பிரதிநிதிகள் மற்றும் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பொங்கல் விழாவில், உலக அமைதி வேண்டி சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்க மூன்று சமாதான புறாவை பறக்க விட்டனர்.



பின்னர் விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியருக்கும், சிறந்த சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் பொங்கல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், சமூக சேவகர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.



தொடர்ந்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக ஏழை, எளிய குடும்ப பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.



பேரூர் ஆதின வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக மதங்களை கடந்து அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர்.

தமிழர் பண்டிகையான பொங்கல் மதம், மொழி கடந்த ஒரு பண்டிகையாகும். அதனடிப்படையில் இந்த மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டுள்ளது என்றும். இந்த முன்னெடுப்பு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது எனவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...