நல்லாம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை - ஒருவர் கைது

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது.



கோவை: கோவை நல்லாம்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

கோவை துடியலூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் காருவாடு பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினார்.

அப்போது அவர் மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...