கோவை டூ சார்ஜாவுக்கு விமானம் மூலம் 7 டன் கரும்பு, மஞ்சள், வெல்லம் ஏற்றுமதி!

கோவையிலிருந்து பொங்கல் பண்டிகைக்காக சார்ஜாவுக்கு கடந்த 5 நாட்களில் 7 டன் கரும்பு, மஞ்சள், வெல்லம் சார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தை முதல் நாளான்று பொங்கல் பண்டிகை கொண்டாட்டப்பட்டுவருகிறது. பொங்கல், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் வழிபாட்டின் பிரதானப் பொருட்கள். அந்த வகையில், இந்த ஆண்டு, கோவையிலிருந்து சார்ஜாவுக்கு விமானம் மூலம் கரும்பு, வெல்லம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தில் 5 நாட்கள் சார்ஜாவுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 5 நாட்களில் கோவையிலிருநது ஏழு டன் அளவுக்கு, பொங்கல் பண்டிக்கைக்கான கரும்பு, மஞ்சள் வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரும்பு மஞ்சள், வாழை இலை, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு புக்கிங் செய்யப்பட்டு ஷார்ஜா செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த 5 நாட்களில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், 5 டன் கரும்பு மற்றும் 2 டன் வெல்லம், மஞ்சள், வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். இந்த பொருட்கள், மதுரை, தேனி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...