கோவையில் மாட்டு பொங்கல் - மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து வழிபட்ட விவசாயிகள்!

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவை ராமநாதபுரம் அருகே விவசாயிகள் தங்கள் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து மாலை அணிவித்து வழிபாடு செய்து கொண்டாடினர்.



கோவை: தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் தங்களது மாடுகளை அலங்கரித்து வழிபட்டு மாட்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் ராமநாதபுரம் அடுத்த பாரதி நகர் பகுதியில், அதிகாலை முதலே மாட்டை குளிப்பாட்டிய விவசாயிகள், மாட்டின் மீது மஞ்சள் தெளித்தும், நெற்றியில் குங்குமம் வைத்தும் வழிபட்டனர்.



இதனை தொடர்ந்து மாட்டுக்கு மாலை அணிவித்த உரிமையாளர்கள், அதற்கு புதிய மூக்கணாங் கயிறையும் அணிவித்தனர்.

இதையடுத்து, மாட்டுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மேலும், இன்று ஒரு நாள் மட்டும் மாட்டை கவனிக்காமல், எப்பொழுதும் மாட்டின் மீது கவனம் செலுத்தி அன்பாய் இருக்க வேண்டுமென மாடு வளர்க்கும் இளம் பெண்கள் கூறினர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...