பல்லடம் அருகே 20 நாட்டு மாடுகளுடன் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய விவசாயி!

பல்லடம் அருகே 20-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்குப் பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து அசத்திய விவசாயி ஈஸ்வரன்.


திருப்பூர்: பல்லடம் அருகே 20-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு விவசாயி ஒருவர் பாரம்பரிய முறையில், மாட்டுப்பொங்கல் கொண்டாடியது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த, சின்னக்காளிபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(63). விவசாயியான இவரிடம், 20-க்கும் மேற்பட்ட காங்கேயம் இன நாட்டு மாடுகள் உள்ளன. மாட்டுப் பொங்கல் தினமான இன்று மத்தளங்கள் முழங்க இவரது தோட்டத்தில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இது குறித்து ஈஸ்வரனிடம் கேட்டபோது, 'மாடுகளை பட்டியாபுரம் தாயாக வழிபட்டு வருகிறோம். அன்றாடம் உழவுக்குச் செல்லும் முன் மாடுகளை வழிபட்ட பின் தான் பணிகளை ஆரம்பிப்போம். மாட்டுப் பொங்கல் நாளில், மாடுகளைக் குளிக்க வைத்து, பொட்டு வைத்து, மாலை சூடி அலங்கரிப்போம்.



தொடர்ந்து, சிறியதாக தெப்பக்குளம் கட்டி, அதில் பால், தண்ணீர் ஊற்றி, குளத்தின் மறுபுறம் முடக்கத்தான், ஆத்திமாறு, ஊஞ்சமாறு ஆகியவற்றைக் கயிறாக்கிக் கட்டுவோம். மாட்டுப் பொங்கலான இன்று உழவுக்குப் பயன்படும் அனைத்து உபகரணங்களையும் வைத்து பூஜை செய்வோம்.



மேலும் மாடுகளுக்குப் பொங்கல் படைத்து, கரும்பு, முறுக்கு உள்ளிட்டவற்றை மாட்டின் கொம்புகளில் கட்டுவோம். தெப்பக்குளம் தாண்டி செல்லும் மாடுகள், முடக்கத்தான் கொடியை அறுத்துக்கொண்டு தெப்பக்குளத்தின் மறுபக்கம் செல்ல வேண்டும்.



அவ்வாறு சென்றால் தான் விவசாய நிலத்தின் முடக்கு நீங்கியதாக அர்த்தம். இதையடுத்து, இறைவனை வழிபட்டு அனைவரும் பொங்கல் உண்போம். முப்பாட்டன், பாட்டன், தந்தை என, வழிவழியாக இந்த மாட்டுப் பொங்கல் வழிபாட்டைச் செய்து வருகிறோம், என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்டார்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...