உதகையில் எமரால்டு அணையிலிருந்து 1500 கிலோ ரேசன் அரிசி மீட்பு

உதகை அருகே எமரால்டு அணைக்குள் 1500 கிலோ ரேசன் அரிசியைச் சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி மர்மநபர்கள் வீசிச் சென்றதால் பரபரப்பு.


நீலகிரி: உதகை அருகே எமரால்டு அணைக்குள் 1500கிலோ ரேசன் அரிசியைச் சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி வீசிச் சென்ற மர்ம நபர்களை, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கேரள மற்றும் கர்நாடகா மாநிலங்களை ஒட்டி உள்ளது. இதனால் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியைக் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குக் கடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனைக் கண்காணிக்கும் பணியில் நீலகிரி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில், தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலையும் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகள் சந்திக்கக்கூடிய சுருக்கி பாலம் என்ற இடத்தில் ரேஷன் அரிசி சிறுசிறு மூட்டைகளாகக் கட்டப்பட்டு அணைக்குள் வீசப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் அணையின் நீரில் தலா 15 கிலோ ரேஷன் அரிசி வீதம் 100 பைகளில் வீசப்பட்டிருந்த அரிசியினை மீட்டனர்.



மேலும் இந்த ரேஷன் அரிசி பைகளை அணைக்குள் வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்தும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...