காட்சிப்பொருளாக நிற்கும் குடிநீர் தொட்டி - உடுமலை தாலுக்கா அலுவலகத்தில் அவலம்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தாலுக்கா அலுவலகத்தில் முறையான குடிநீர் வசதி செய்யப்பட்டாமல், அங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டி இதுவரை காட்சிப்பொருளாக மட்டுமே இருந்து வருவது அப்பகுதி மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் கிளைச்சிறை, இ-சேவை மையங்கள், நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.



உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியிலில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி இதுவரை செய்யப்படவில்லை.



இங்கு தாலுக்கா அலுவலக பிரதான நுழைவு வாயில் அருகே ஒரு பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொட்டியிலும் முறையாக தண்ணீர் நிரப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டு, வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.

இதனால், அரசு சார்ந்த பணிகளுக்காக தாகத்துடன் வரும் பொதுமக்கள், தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி, தாலுக்கா அலுவலக வளாகத்தில் தேவையான குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித்தர தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...