காட்சிப்பொருளாக நிற்கும் குடிநீர் தொட்டி - உடுமலை தாலுக்கா அலுவலகத்தில் அவலம்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தாலுக்கா அலுவலகத்தில் முறையான குடிநீர் வசதி செய்யப்பட்டாமல், அங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டி இதுவரை காட்சிப்பொருளாக மட்டுமே இருந்து வருவது அப்பகுதி மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் கிளைச்சிறை, இ-சேவை மையங்கள், நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.



உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியிலில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி இதுவரை செய்யப்படவில்லை.



இங்கு தாலுக்கா அலுவலக பிரதான நுழைவு வாயில் அருகே ஒரு பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொட்டியிலும் முறையாக தண்ணீர் நிரப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டு, வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.

இதனால், அரசு சார்ந்த பணிகளுக்காக தாகத்துடன் வரும் பொதுமக்கள், தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி, தாலுக்கா அலுவலக வளாகத்தில் தேவையான குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித்தர தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...