கோவை மாநகராட்சி பணிகளை மேயர் கல்பனா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட துடியலூர் மார்க்கெட் பகுதியில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்து வரும் பல்வேறு பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.2-க்குட்பட்ட துடியலூர் மார்க்கெட் பகுதியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை (Micro Composting Centre) மேயர் கல்பனா ஆனந்தகுமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து அதேபகுதியில் ரூ.1.83 லட்சம் மதிப்பீட்டில் சிறுநீர் கழிப்பிடத்திற்கான கட்டுமானப்பணியினை மேயர், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் எனப் பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

துடியலூர் பகுதியிலுள்ள நகர்நல மையத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்தும், தாய் சேய் நலம் குறித்தும், மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.



பின்னர், வடக்கு மண்டலம், வார்டு எண். 1-க்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மைய (Micro Composting Centre) கட்டுமானப்பணியினையும், அதே பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நகர்நல மையத்தையும், கலைஞர் நகர்ப் பகுதியில் 200 மீட்டர் தொலைவிற்கு ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகத் தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகச்செய்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, வார்டு எண்.1-க்குட்பட்ட பி.ஆர்.எம் கார்டன் முதல் துடியலூர் சந்திப்புவரை மழைநீர் வடிகால் கட்டுவதற்கு உரியத் திட்ட மதிப்பீடு தயாரித்திடச் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்திய பின்னர், வார்டு எண்.18-க்குட்பட்ட நல்லாம்பாளையம், ஜெயந்தி நகர்ப் பகுதியில் பின்னர், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நகர்நல மைய கட்டுமானப்பணியினை மேயர் கல்பனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து மாணவர்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார். இதே போல வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ராமசாமி நகர்ப் பகுதியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினையும் மேயர் ஆய்வு செய்தார்.



இதே போல நல்லாம்பாளையம், ராமசாமி நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப்பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வடக்கு மண்டல வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் புஷ்பமணி, கற்பகம், ராதாகிருஷ்ணன், உதவி ஆணையர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் பௌன்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சென்றனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...