'டேன் டீ தோட்டங்களை வனத்துறையிடம் அரசு ஒப்படைக்க கூடாது..!' - நீலகிரியில் சீமான் வலியுறுத்தல்

டேன் டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நீலகிரி அடுத்த பந்தலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் டேன்டீ எனப்படும் அரசு தேயிலை தோட்ட கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த தேயிலை தோட்ட கழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாயகம் திரும்பிய தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஆட்குறைப்பு செய்யப்பட்டு சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மேலும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் தேயிலை தோட்டத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கு டேன்டீ தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இதனிடையே நீலகிரி அடுத்த பந்தலூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன பொது கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், 1968-ல் பேரறிஞர் அண்ணா-வால் உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்ட நிலங்களை வனத்துறைக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை அதை முன்னெடுத்து தான் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

நீண்ட காலமாக தாயகம் திரும்பிய நமது மக்கள் டேன் டீ தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வரும் நிலையில் தற்போது டேன் டீ -யை வனத்துறைக்கு கொடுப்பதன் மூலம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தையும், வேலை வாய்ப்பை இழக்க நேரிடும்.

அதற்கு நிர்வாகம் தான் பொறுப்பு. தொழிலாளர் மக்கள் பொறுப்பேற்க முடியாது. 2,100 பேரை பணி நீக்கம் செய்துவிட்டு ஆட்கள் பற்றாக்குறை என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு மீண்டும் டேன் டீ-யை நடத்த வேண்டுமென்பது எங்களின் கோரிக்கை. அதற்காகத்தான் தொடர்ச்சியாக மக்கள் போராடி கொண்டிருக்கின்றனர்.

டேன் டீ தொழிலாளர்கள் நாளொன்றுக்கு கூலியாக கேட்பது 425 ரூபாய். ஒப்பந்தக் காலம் முடிந்தால் தேயிலை தோட்ட நிலங்கள் வனமாக மாற்றப்பட கூடாது, என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...