கோவை மலுமிச்சம்பட்டியில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மலுமிச்சம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊதுகுழலாகவும், மக்கள் விரோத போக்கை கடைபிடிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டி பகுதியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களை கிடப்பில் போடுவதாகவும், ஆர்.எஸ் எஸ் அமைப்பின் ஊதுகுழலாகவும், மக்கள் விரோத போக்கை தமிழ்நாடு ஆளுநர் கடைப்பிடித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.



காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மதுக்கரை பாலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காளீஸ்வரன், ஜி.ஏ.கண்ணன், ஆர்.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் அவரை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கு.பே.துரை, புவனேஸ்வரி, நஞ்சப்பன், முருகானந்தம், உதயகுமார் உள்ளிட்ட வட்டார தலைவர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...