உடுமலையில் அன்னாசிப் பழம் விற்பனை அமோகம்

கேரளாவில் அன்னாசிப் பழ உற்பத்தி அதிகரித்துள்ளதால் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் பழங்கள் விற்பனைக்காக அதிகளவு குவிந்துள்ளன.


திருப்பூர்: அன்னாசிப் பழ சீசன் தொடங்கியுள்ளதால், உடுமலைப் பகுதியில் விற்பனை களைக்கட்டியுள்ளது. மக்கள் ஆர்வமுடன் அன்னாசிப் பழங்களை வாங்கி செல்கின்றனர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அன்னாசிப் பழ விவசாயம் அதிகளவு நடைபெறுகிறது. அங்குள்ள வாழக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் பல ஆயிரம் ஏக்கரில் அன்னாசிப் பழ சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் விளையும் கன்னராக்க என்ற ரகத்துக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. எனவே இந்த ரகம் வாழக்குளம் பகுதியிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.



பிற ரக அன்னாசியும் பரவலாக உற்பத்தியாகிறது. நடப்பாண்டு உற்பத்தி வழக்கத்தை விட அதிகரித்துள்ளதால் விலை சரிவைத் தவிக்கத் தமிழக -கேரளா எல்லைப் பகுதியில் அன்னாசிப் பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.



அவ்வகையில், உடுமலை பகுதிக்கு மூணாறு வழியாக அன்னாசிப் பழங்கள் கொண்டு வரப்பட்டுத் தரத்தின் அடிப்படையில் பழம் ரூ.30 முதல் விற்பனை செய்யப்படுகிறது நாள்தோறும் 5 லோடு அளவுக்கு அன்னாசி கொண்டு வரப்படுகிறது.

அன்னாசிப் பழ சீசனை யொட்டி இப்பகுதியில் விற்பனை அதிகளவு இருக்கும். எனவே அதைத் திட்டமிட்டு பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்கிறோம் என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...