கோவையில் கோவிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு - அதிரடியாக மீட்ட அதிகாரிகள்!

கோவை தேவராயபுரத்தில் வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.


கோவை: கோவை தேவராயபுரம் ஆக்கிரமிப்பிலிருந்த வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் பரமேஷ்வரன் பாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 24.7 ஏக்கர் நிலங்கள் தேவராயம்புரம் பகுதியில் உள்ளது. இந்த நிலங்களைக் கடந்த 25 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜன், ராமசாமி, சீனிவாச ஐயங்கார், ஆனந்தகிருஷ்ணன் ஐயங்கார், உள்ளிட்ட 5 பேர் ஆக்கிரமிப்பு செய்து கத்திரிக்காய், தக்காளி உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகளைச் செய்து வந்தனர்.

இது குறித்து கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, கோவிலுக்குச் சொந்தமான சுமார் 25 கோடி மதிப்பிலான 24.7 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்டனர்.



மேலும் அங்கு இது குறித்தான அறிவிப்புப் பலகை வைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...