கோவை சூலூர் அருகே சாலைத்தடுப்பில் அரசுப்பேருந்து மோதி விபத்து - உயிர் தப்பிய பயணிகள்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே அதிவேகமாக சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், பயணிகள் அனைவரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக திருச்சி சாலையில் குறுக்கு சாலை சந்திப்பு உள்ளது. இங்கு விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு காவல்துறை சார்பில் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருச்சியில் இருந்து கோவை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, டிவைடர் வைக்கப்பட்டுள்ள இடத்தை கடந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த பைக் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக, பேருந்து ஓட்டுநர் முயற்சித்தார்.



அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து அருகே இருந்த சாலை தடுப்பு (சென்டர் மீடியன்) மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில், பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்த நிலையில், பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

காயமடைந்த பயணிகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.



இந்த விபத்தால் திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...