'மேட்டுப்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நந்தவனம் மேம்படுத்தப்படும்..!' - ஆ.ராசா எம்.பி., தகவல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பவானி ஆற்றில் ஈமகாரியங்கள் செய்யும் நந்தவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இரண்டு நாட்கள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்.



நகராட்சி பகுதியில் உள்ள வசந்தம் நகரில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் யோகா பயிற்சி மையத்தை, ஆ.ராசா மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.



மேலும், மணிநகர் அரசுப்பள்ளி அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவு சார் மையத்தின் கட்டுமான பணிகள் மற்றும் நீரேற்று நிலையத்தினையும் அவர் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பழுதடைந்துள்ள நெல்லித்துரை சாலை மற்றும் மேட்டுப்பாளையத்தில் முன்னோர்களுக்கு பவானி ஆற்றில் தர்ப்பணம் கொடுக்கவும், ஈம காரியங்கள் செய்ய அனைத்து இந்து சமுதாய நலச்சங்கம் நிர்வகிக்கும் நந்தவனம் பகுதியினை ஆய்வு மேற்கொண்டு அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கை வைத்த நிலையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய படித்துறை கட்டுதல், கழிவறை, குளிப்பதற்கு குளியல் அறை போன்றவற்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆ.ராசா அப்போது உறுதியளித்தார்.

அதேபோல், மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவில் சாலை நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதனையும் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில் ஆ.ராசா கலந்துகொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது மேட்டுப்பாளையம் வட்டாட்சியர், நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன், துனை தலைவர் அருள்வடிவு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...