'தேர்தலில் வெற்றிப் பெற்று மகன் விட்டுச் சென்ற பணியை தொடர்வேன்' - ஈவிகேஎஸ் இளங்கோவன் உறுதி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.



அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,



ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பதற்கு மறுமலர்ச்சி திராவிட கழகம் உறுதுணையாக இருக்கும் என்றார்.

எதிரிக்கு டெபாசிட் போய்விட்டது என்ற நிலையை உருவாக்குவதற்கு எங்கள் கட்சியை சார்ந்தவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆளுநர் சனாதன ஆட்சியை நடத்திக்கொண்டு வருகிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி சிறப்பான வெற்றி பெறும், என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,



மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எங்களுக்கு ஆதரவு வழங்குவது மட்டுமல்லாமல் வைகோ நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். தமிழ்நாட்டில் ஒரு காவல் வீரனாகவும், போர் வீரனாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். அவரின் அன்பின் காரணமாக வரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

என் மகன் விட்டுச்சென்ற பணியை நான் இத்தேர்தலில் வெற்றிபெற்று தொடர்வேன். பாஜக தேர்தலில் போட்டியிட்டால் நாங்களை அக்கட்சியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு பாஜகவினருக்கு தோல்வியை பெற்று தருவோம், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...