குடியரசு தினக் கொண்டாட்டம் - கோவை போலீசார் ஒத்திகை அணிவகுப்பு!

கோவையில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவலர்களின் ஒத்திகை அணிவகுப்பு நடைபெற்றது.


கோவை: குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதில், குறிப்பாக, இராணுவம் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறும்.



இந்நிலையில், குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, கோவை மாவட்டத்தில் குடியரசு தின விழா வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அதனையொட்டி, கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.



இதற்கான ஒத்திகை, காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.



இதில், சுமார் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்றனர். இங்கு, அணிவகுப்பு தொடங்கப்படுவதில் இருந்து தேசிய கொடிக்கு மாவட்ட ஆட்சியருக்கும் மரியாதை செலுத்துவது, மாவட்ட ஆட்சியர் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ளும்போது பின்பற்ற வேண்டியவை உட்பட அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒத்திகை பார்க்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...