நீலகிரி மலை ரயிலை மறித்த காட்டுயானைக் கூட்டம் - அச்சத்தில் உறைந்த பயணிகள்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை திடீரென காட்டுயானைக் கூட்டம் ஒன்று வழிமறித்ததால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டுயானைக்கூட்டம், கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளது. அவ்வப்போது உணவிற்காக மலைப்பாதையிலும், மலை ரயில் பாதையிலும் முகாமிடுவதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.



இந்த நிலையில், நேற்று மாலை குன்னுரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை காட்டுயானைக் கூட்டம் திடீரென வழிமறித்தது. இதனால், மலை ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.



சுமார் அரை மணி நேரம் ரயில்பாதையில் நின்ற காட்டுயானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. இதனால், ரயிலில் இருந்த சுற்றுலாபயணிகள் நிம்மதியடைந்தனர். மலை ரயிலை காட்டுயானை வழிமறித்த சம்பவத்தால், பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...