நீலகிரி மலை ரயிலை மறித்த காட்டுயானைக் கூட்டம் - அச்சத்தில் உறைந்த பயணிகள்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை திடீரென காட்டுயானைக் கூட்டம் ஒன்று வழிமறித்ததால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டுயானைக்கூட்டம், கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளது. அவ்வப்போது உணவிற்காக மலைப்பாதையிலும், மலை ரயில் பாதையிலும் முகாமிடுவதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.



இந்த நிலையில், நேற்று மாலை குன்னுரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை காட்டுயானைக் கூட்டம் திடீரென வழிமறித்தது. இதனால், மலை ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.



சுமார் அரை மணி நேரம் ரயில்பாதையில் நின்ற காட்டுயானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. இதனால், ரயிலில் இருந்த சுற்றுலாபயணிகள் நிம்மதியடைந்தனர். மலை ரயிலை காட்டுயானை வழிமறித்த சம்பவத்தால், பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...