சீட்டாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஆத்திரம் - நண்பர்களைக் கடத்தி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய 7 பேர் கைது!

பல்லடம் அருகே சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆத்திரத்தில் நண்பர்களை கடத்தி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 7 பேர் கைது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நண்பர்களை கடத்தி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடத்தை அடுத்த அருள்புரம் பகுதியை சேர்ந்த பிரபாகர்(வயது30), அங்குள்ள பனியன் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது நண்பர்களான பிரகாஷ்(வயது38) மற்றும் மனோஜ்(வயது26) ஆகியோருடன் வீட்டில் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், பிரபாகரின் நண்பர் உசிலம்பட்டியை சேர்ந்த மாசாணம்(வயது30) என்பவரும் சூதாட்டத்தில் பணம் வைத்து விளையாடியுள்ளார்.

சீட்டாட்டத்தில் அதிக அளவு பணத்தை இழந்ததால் ஆத்திரம் அடைந்த மாசாணம், தனது நண்பர்களான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜா(வயது25), துரைபாண்டி(வயது22) மற்றும் மருதுபாண்டி(வயது22), திருவள்ளூரை சேர்ந்த மகேஷ்(வயது42), சென்னை அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன்(வயது31), திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பரத்குமார்(வயது 25) ஆகியோருடன் சென்று பிரபாகர் மற்றும் அவரது நண்பர்கள் பிரகாஷ் மற்றும் மனோஜ் ஆகியோரை சரமாரியாக தாக்கி மாசாணம் வீட்டிற்கு காரில் கடத்திச்சென்றுள்ளனர்.

பின்னர், அங்கு வைத்து மூவரையும் அடித்து உதைத்து சித்தரவதை செய்ததோடு நிர்வாணமாக்கி வீடியோவும் எடுத்துள்ளனர். ஐந்து லட்சம் பணம் கேட்டு அவர்களை மிரட்டியதோடு தரமறுத்தால் வீடியோவை வெளியிடப் போவதாகவும் மிரட்டி அனுப்பியுள்ளனர்.

அங்கிருந்து தப்பி வந்த பிரகாஷ், பல்லடம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார், மாசாணம் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.



பின்னர் கைது செய்யப்பட்ட 7 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...