தேசிய நூற்பாலைகள் திறக்க வேண்டும்..! - மத்திய அரசுக்கு இந்திய தொழில் வர்த்தக சபை கோரிக்கை

சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில், கோவையில் மூடிக்கிடக்கும் தேசிய நூற்பாலைகளை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய தொழில் வர்த்தக சபை வேண்டுகோள்.


கோவை: கோவையில் இந்திய தொழில் வளர்த்தல் சபை கூட்ட அரங்கில் தொழிலதிபர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.



அமைப்பின் தலைவர் ஸ்ரீ ராமு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், செயலாளர்கள் கார்த்திகேயன், அண்ணாமலை, துணைத் தலைவர்கள் ராஜேஷ், பி லந்து, துரைராஜ், சுந்தரம், பொருளாளர் வைஷ்ணவி கிருஷ்ணன் மற்றும் தொழிலதிபர்கள் வனிதா மோகன் நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கோவை தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து தர, மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், மத்திய அரசு வாட் வரிவிதிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கோவை விமான நிலையத்தை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும். ரயில் திட்ட பணிகள் மேம்படுத்தவும், எல் அண்ட் டி பைபாஸ் சாலையை விரிவாக்கவும், மதுக்கரை பாலக்காடு சாலை மரப்பாலம் பகுதியிலிருந்து விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக விரோத செயல்கள் தடுக்க கோவையில் உள்ள தேசிய பஞ்சாலை மில்கள் மூடி கிடப்பதை ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இந்த கோரிக்கைகளை கோவை மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டுமெனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்திடம் தொழிலதிபர்கள் கேட்டுக்கொண்டனர்.



இதற்கு பதிலளித்துப் பேசிய எம்.பி. சண்முகசுந்தரம், கோவை மாவட்டம் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை பெற்று இருக்கிறது என்பதை புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார்.

மேலும், மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை மத்திய அரசுடன் பேசி தீர்வு ஏற்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...